Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அவசியம்

பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அவசியம்

பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அவசியம்

பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அவசியம்

ADDED : செப் 14, 2025 03:54 AM


Google News
கம்பம்,: தேனி மாவட்டத்தில் பைபாஸ் சந்திப்புகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழ் கொண்டுவரப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது, தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

- ஒவ்வொரு பைபாஸ் ரோட்டிலும் ஆரம்பம் மற்றும் முடியும் இடங்களில் தினமும் ஏதாவது ஒரு வகையில் வாகன மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் பைபாஸ் சந்திப்புக்களில் ஊருக்குள் வாகனங்கள் செல்ல 3 ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் எந்தவிதமான போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான வரைபடங்களோ, அல்லது எந்த வாகனம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை அறிவிக்கும் வாசகங்களோ இல்லை. கிராம பகுதிகளாக இருப்பதால், பைபாஸ் சந்திப்புக்களில் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பைபாஸ் சந்திப்புகளில் குறிப்பாக உத்தமபாளையம் பைபாசில் தென்னஞ்சாலை, கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி விலக்கு ஆகிய இடங்களிலும், சின்னமனூர் பைபாசில் நுழையும் இரண்டு சந்திப்புக்கள் மற்றும் மார்க்கையன்கோட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் ரவுண்டானா அமைக்க வேண்டும். கம்பம் பைபாசிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும். ரவுண்டானா அமைத்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us