Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உணவு பாதுகாப்பு அலுவலர் என போலி நபர்கள் தொடர்பு கொண்டால் புகார் கூறவும்

உணவு பாதுகாப்பு அலுவலர் என போலி நபர்கள் தொடர்பு கொண்டால் புகார் கூறவும்

உணவு பாதுகாப்பு அலுவலர் என போலி நபர்கள் தொடர்பு கொண்டால் புகார் கூறவும்

உணவு பாதுகாப்பு அலுவலர் என போலி நபர்கள் தொடர்பு கொண்டால் புகார் கூறவும்

ADDED : ஜூன் 18, 2025 04:43 AM


Google News
தேனி: தேனி மாவட்டத்தில் பணிபுரிந்த அனைத்து உணவுப்பாதுகாப்பு அலுவலர்களும் வேறு மாவட்டங்களுக்கு மாறதலில் சென்றனர். கம்பம் தவிர மற்ற வட்டாரங்களுக்கு புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம்,பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத்துறையினர் விதிமுறைகளின் படி உணவுகள் தயாரித்தல், பாதுகாத்தல், காட்சிப்படுத்துதல், பரிமாறுதல், விற்பனை செய்தல் வேண்டும்.

அச்சிட்ட காகிதங்களில் உணவுகள் வழங்கூடாது. உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் என போலி நபர்கள் தொடர்பு கொண்டால் எஸ்.பி., உணவுப்பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரிடம் 04546 252549 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். பொதுமக்கள் உணவுப்பொருட்கள் பற்றிய புகார்களை 94440 42322ல் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us