Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 06, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
தேனி: தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் கம்மவார் நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இக்கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜூன் 3ல் துவங்கின. முதல், 2ம், 4 ம் கால யாக வேள்விகள், பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் கும்பத்திற்கு மஹா சம்ப்ரோசண பூஜைகள் நடந்தது. இப்பூஜையில் ஸ்ரீவில்லிபுத்துார்சடகோபராமானுஜ ஜீயர் தலைமை வகித்தார்.அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ நம்பெருமாள், வீமினி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவ பட்டர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிேஷகத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வத்திற்கு சால்வை அணிவித்து விழா கமிட்டியினர் மரியாதை செய்தனர். அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள், கம்ம குல பாகவத மகா ஜன பொது மக்கள் கலந்த கொண்டனர்.

விழா கமிட்டியினர் ரவிச்சந்திரன்,ராதாகிருஷ்ணன், பரசுராமன், குருசாமி, சீனிவாசன், ஜெயராஜ், வரதராஜன், டெய்லர் ஸ்ரீனிவாசன், திருப்பூர் கணேசன், முருகேசன், தர்மராஜ், ராமசுப்பு,தனபால், தாமரைககண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயில் கட்டுவதற்கு நிலம் வழங்கிய கோபால்சாமி நாயக்கர்,கிருஷ்ணம்மாள் குடும்பத்தினர், நன்கொடை வழங்கியவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில்அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒன்றியச் செயலாளர்முருகேசன், ஹோட்டல் அதிபர் மணிகண்டன், அமுதம் ஸ்டோர் விக்னேஸ்வரன், வேலப்பா ஹோட்டல் ஸ்ரீனீவாசன், ஏ.சி.வி., மில் இயக்குனர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us