Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜூலை 9ல் தேனியில் உண்ணாவிரதம் ரயில்  பாதை போராட்டக்குழு முடிவு

ஜூலை 9ல் தேனியில் உண்ணாவிரதம் ரயில்  பாதை போராட்டக்குழு முடிவு

ஜூலை 9ல் தேனியில் உண்ணாவிரதம் ரயில்  பாதை போராட்டக்குழு முடிவு

ஜூலை 9ல் தேனியில் உண்ணாவிரதம் ரயில்  பாதை போராட்டக்குழு முடிவு

ADDED : ஜூன் 19, 2025 03:07 AM


Google News
தேனி:திண்டுக்கல் - குமுளி அகல ரயில்பாதை திட்டப் போராட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர்கள் மெல்வின், அந்தோணிபிரான்சிஸ், துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம், சரவணக்குமார், கண்ணுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

லோயர்கேம்ப் -எருமேலி புதிய ரயில் பாதை திட்ட ஆய்விற்காக நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், போடியில் இருந்து காலையில் புறப்பட்டும், மதுைரயில் இருந்து மாலையில் திரும்பும் வகையில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும். போடி முதல் சென்னைக்கு திருச்சி வழியாக புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ல் தேனியில் உண்ணாவிரதம் நடத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us