/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல் மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்
மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்
மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்
மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்
பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலிவு பாதிப்பை இளம் பெற்றோர் எவ்வாறு கண்டறிவது
பிறந்த குழந்தைகள் தனித்துவமாக உடல் அம்சங்களை கொண்டிருந்தால் மனநலிவு நோய்க்கான மரபணு (Karotyping) பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, அதற்குப் பின் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை சிகிச்சைகள், அதாவது இருதயம், ரத்தத்தில் (தைராய்டு, ரத்த அளவு) பரிசோதனைகளும் செய்யப்பட்டு பாதிப்பை அளவை கண்டறிகிறோம்.
குழந்தைகள், பெற்றோர்களுக்கான பயிற்சிகள் குறித்து
பின் சிறப்புப் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, இயன்முறை செயல்முறை பயிற்சி, பெற்றோர்களை மனதளவில் தயார்படுத்த உளவியல் ஆலோசனை அளித்து வருகிறோம். ஏனெனில் இம்மாதிரியான பாதிப்படைந்த குழந்தைகள் கூடுதல் கவனிப்பும், கண்காணிப்பும் அவசியமாகிறது. இந்த இடத்தில் பல பெற்றோர்கள் மனதளவில் சோர்வு ஏற்படுகிறது. கடவுள் மேல் பாரத்தை இறக்கிவைத்துவிட்டு, தீவிர பயிற்சி அளிக்கவும், மனதளவிலும் அவர்களை தயார்படுத்த உளவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பயிற்சிக்கான செலவினங்கள் குறித்து
குழந்தைகளுக்கான சிகிச்சை செலவினங்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் மூலம் உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பொது மக்கள் மருத்துவக்கல்லுாரியில் உள்ள மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையத்தின் மேலாளரை அணுகலாம்.
பாதிப்பை குணப்படுத்த முடியுமா
தீவிர பயிற்சி, தொடர் சிகிச்சை மூலம் 90 சதவீதம் குணப்படுத்த முடியும். அதனால்தான் ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். குறிப்பாக பெற்றோர்களின் அளப்பறிய கண்காணிப்பும், பராமரிப்பும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் பயிற்சிக்கு இடையீட்டு மையத்திற்கு அழைத்து வரும் பெற்றோர் பல நேரங்களில் தொடர் பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது பாதிப்பின் வீரியத்தை கூட்டுகிறது. இதனால் தொடர் பயிற்சி, சிகிச்சை மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.