Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சோத்துப்பாறை வனப்பகுதியில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்

சோத்துப்பாறை வனப்பகுதியில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்

சோத்துப்பாறை வனப்பகுதியில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்

சோத்துப்பாறை வனப்பகுதியில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்

ADDED : செப் 01, 2025 02:38 AM


Google News
பெரியகுளம்: சோத்துப்பாறை வனப் பகுதியில் சிதறிக்கிடந்த 30 கிலோ பாலிதீன் கழிவுகளை மாணவர்கள் குழுவினர் அகற்றி, தென்கரை துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

சோத்துப்பாறை அணைப்பகுதி, மேல் பகுதியில் உள்ள போடி வடக்குமலை காப்புக்காடு வனப்பகுதிக்கு வரும் மக்கள் பாலிதீன் கவர்களை துாக்கி வீசிச் செல்கின்றனர்.

இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. வனப்பகுதியில் பாலிதீன் குப்பையை அகற்றுவதற்கு ரேஞ்சர் ஆதிரை தலைமையில், வனவர் தனபால், சமூக ஆர்வலர் ரஞ்ஜித்குமார், கல்லுாரி மாணவ, மாணவிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த 30 கிலோ எடையுள்ள பாலிதீன் கழிவுகளை சேகரித்தனர். பின் சேகரம் செய்த பாலிதீன் கவர்கள், குப்பையை தென்கரை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us