/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
ADDED : மே 22, 2025 04:44 AM
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும், நேருநகரைச் சேர்ந்த சரவணன் 29. என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். தகவல் அறிந்த பெரியகுளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் மாரியம்மாள் விசாரணை நடத்தினார். அவரது புகாரில் சிறுமியை திருமணம் செய்த சரவணன் மீது போக்சோ சட்டப்பிரிவில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.--