Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பணத்தை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

பணத்தை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

பணத்தை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

பணத்தை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

ADDED : ஜூன் 03, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
தேனி: தனியார் நிறுவன அறக்கட்டளையில் பணத்தை செலுத்தி இழந்தவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் முகாம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவன அறக்கட்டளையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணம் செலுத்தினால் இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசையில் பலரும் பணம் செலுத்தினர். பணம் செலுத்தும் காலம் முடியும் தருவாயில் நிறுவனத்தினர் வைப்புத்தொகை வழங்காமல் ஏமாற்றி, தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்களிடம் உள்ள சான்றிதழ்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மத்திய புலானாய்வுத்துறை, சென்னை பொருளாதார குற்றப் பிரிவினர் ஆவண நகல்களை பொது மக்களிடம் இருந்து பெற்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us