Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் சேர ஆர்வமில்லை! விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மின்வாரியம் சுணக்கம்

சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் சேர ஆர்வமில்லை! விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மின்வாரியம் சுணக்கம்

சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் சேர ஆர்வமில்லை! விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மின்வாரியம் சுணக்கம்

சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் சேர ஆர்வமில்லை! விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மின்வாரியம் சுணக்கம்

ADDED : ஜூன் 26, 2024 07:57 AM


Google News
கம்பம் : மாவட்டத்தில் வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தில் சேர பொது மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாத நிலையில், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் தவறிவிட்டதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரத் தேவை அதிகரித்த நிலையில், உற்பத்திக்கும் தேவைக்கும் அதிக இடைவெளி இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை வீடுகளுக்கு அறிமுகம் செய்தது. ரூ.75 ஆயிரம் கோடியை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு கிலோவாட் கேட்டு விண்ணப்பிக்கும் பொது மக்களுக்கு ரூ.30 ஆயிரம், இரண்டு கிலோவாட் கேட்பவர்களுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவாகும். ஆனால் விண்ணப்பிக்கும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு கிலோ வாட் என்றால் ரூ 70 ஆயிரம், 2 கிலோவாட் என்றால் ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரம் முன்கூட்டியே செலுத்த வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு வந்து பேனலை பொருத்துவார்கள்.

அதன் பின் மின்வாரியம் பைவே மீட்டரை பொருத்தும். மின் உற்பத்தியில் 300 யூனிட் உங்கள் வீட்டில் தயாரித்து 200 யூனிட் பயன்படுத்தினால், மீதமுள்ள 100 யூனிட்டை வாரியம் எடுத்து கொள்ளும். அதற்கு கட்டணம் வாரியம் வழங்காது. ஆனால் மின் பயன்பாட்டில் அதை சமன் செய்து கொள்ளும்.

மாவட்டத்தில் உள்ள 44 உதவி பொறியாளர்களும் சேர்ந்து 44 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் இணைப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயித்து, பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் பொது மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், இத்திட்டம் தேக்கமடைந்து உள்ளது. வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரம், துணை மின் நிலையத்திற்கு செல்வதையும், மின் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட வீட்டின் பயன்பாட்டிற்கு மின்சாரம் செல்வதும் கணக்கீடு செய்ய 'பைவே' மீட்டர் பொருத்தப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் சேர பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை வட்டார அளவில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு சிலரே விண்ணப்பித்து உள்ளனர். பயனுள்ள இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற பொது மக்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் போதிய விழிப்புணர்வு பணிகளை மின்வாரியம் முன்னெடுக்க வில்லை என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us