Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆவின் பண பட்டுவாடா இன்றி பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

ஆவின் பண பட்டுவாடா இன்றி பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

ஆவின் பண பட்டுவாடா இன்றி பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

ஆவின் பண பட்டுவாடா இன்றி பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

ADDED : ஜூன் 25, 2025 07:05 AM


Google News
தேனி: தேனி மாவட்டத்தில் ஆவின் கொள்முதல் செய்த பாலிற்கு ஒரு மாதமாக பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தினமும் தேனி ஆவின் 50ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஒரு லிட்டர் ரூ.33 விலையிலும், பாலில் உள்ள கொழுப்பு தன்மையைக்கு ஏற்ப ரூ.3 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கொள்முதல் செய்யும் பாலுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஆவின் நிர்வாகம் பால் தொகை பட்டுவாடா செய்யும். கடந்த ஒரு மாதமாக உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வில்லை.

இதனால் பசுக்களுக்கு தீவனம் வாங்க முடியாமலும், இதர செலவுகளை மேற்கொள்ள முடியாமலும் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பணம் வழங்க தாமதம் ஆகி வருவதால் உற்பத்தியாளர்கள் பலரும் தனியாருக்கு பால் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆவின் உற்பத்தி மேலும் சரிவை நோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேனி ஆவின் பொது மேலாளர் ரமேஷ் கூறுகையில், ' உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ஆணையரகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அங்கிருந்து பணம் கிடைத்தவுடன் பட்டுவாடா செய்யப்படும்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us