Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாய் மீது கல்லெறிந்த தகராறு ஒருவருக்கு ஓராண்டு சிறை

நாய் மீது கல்லெறிந்த தகராறு ஒருவருக்கு ஓராண்டு சிறை

நாய் மீது கல்லெறிந்த தகராறு ஒருவருக்கு ஓராண்டு சிறை

நாய் மீது கல்லெறிந்த தகராறு ஒருவருக்கு ஓராண்டு சிறை

ADDED : மே 25, 2025 05:17 AM


Google News
தேனி: தேனியில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டனுக்கு 60, ஓராண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்லிநகரத்தை சேர்ந்த மணிகண்டன் வீட்டில் நாய் வளர்த்தார். இவர் வளர்த்த நாய் பக்கத்து வீட்டில் வசித்த அறுமுகம் அவரது உறவினர்களை கடிக்க முயற்சித்தது. அப்போது ஆறுமுகம் நாய் மீது கல்லை எறிந்தார். இதனால் மணிகண்டன், ஆறுமுகம் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் மணிகண்டன்,அவரது உறவினர்கள் மூவேந்தன், மாரியம்மாள், ஆனந்தன், நதியா ஆகியோர் இணைந்து ஆறுமுகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஆறுமுகம் புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வழக்கு விசாரணை தேனி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஓராண்டு சிறை, ரூ.5ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பு அளித்தார். மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் இசக்கிவேல் ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us