போலீஸ் ஸ்டேஷனில் மயங்கியவர் இறப்பு
போலீஸ் ஸ்டேஷனில் மயங்கியவர் இறப்பு
போலீஸ் ஸ்டேஷனில் மயங்கியவர் இறப்பு
ADDED : செப் 30, 2025 05:19 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் செண்பகதொழுகுடி கிராம தலைவர் செல்லன் 80. அந்த கிராமத்தை சேர்ந்த இருவர் இடையே ஏற்பட்ட பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.
அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்லன் சாந்தாம்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீஸ் வாகனத்தில் ராஜகுமாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு செல்லன் இறந்ததாக தெரியவந்தது.


