ADDED : அக் 09, 2025 04:19 AM
கூடலுார் : கம்பத்திலிருந்து குமுளி நோக்கி நேற்று காலையில் சென்ற அரசு பஸ்யை டிரைவர் பாஸ்கரன் ஓட்டினார். கண்டக்டராக விவேக் இருந்தார்.
கூடலுார் அரசமரம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் சென்றபோது கூடலூரை சேர்ந்த பரத் 27, என்பவர் பஸ்சின் பின்பகுதியில் கையால் குத்தியுள்ளார். இதை தட்டி கேட்ட டிரைவரை பரத் பலமாக தாக்கினார்.
இதில் காயமடைந்த டிரைவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூடலுார் வடக்கு போலீசார் பரத்தை கைது செய்தனர்.


