Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவிக்கு ஆயுள்

கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவிக்கு ஆயுள்

கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவிக்கு ஆயுள்

கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவிக்கு ஆயுள்

ADDED : ஜூன் 24, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
தேனி: குடும்பத் தகராறில் கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, 'ஜன்னி' வந்துவிட்டதாக நாடகமாடிய மதுரை அச்சம்பத்தை சேர்ந்த மனைவி ஜெயாவுக்கு 33, ஆயுள் தண்டனை விதித்து தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பணசாமி கோயில் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜா 36. பால் மாடுகள் வளர்த்து, பைனான்ஸ் தொழில் செய்தார்.

இவருக்கும் மதுரை மாவட்டம், அச்சம்பத்தை சேர்ந்த ஜெயாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். ராஜா வீடு கிரகபிரவேசம் செய்ததில் செய்முறையாக ரூ.13 லட்சம் கிடைத்தது. இந்த தொகையை செலவு செய்வதில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.

2023 ஏப்.30ல் மாலை ராஜாவை ஜெயா அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின் ரத்தக்கறை படிந்த உடைகளை அகற்றி, வேறு கைலியை இடுப்பில் சுற்றினார்.

பின் 'ராஜா ஜன்னி வந்து மயங்கிவிட்டார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்' என ஆட்டோ டிரைவர் குமாரை வரவழைத்துள்ளார். குமார் வந்து பார்த்த போது ராஜா கொலை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

உடனடியாக ராஜாவின் தாயார் அன்னத்தாயிடம் கூறினார். அன்னத்தாய் புகாரில் ஜெயாவை கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.

இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. ஜெயாவிற்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us