Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயிலில் கலசாபிஷேகம்

கோயிலில் கலசாபிஷேகம்

கோயிலில் கலசாபிஷேகம்

கோயிலில் கலசாபிஷேகம்

ADDED : ஜூன் 29, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே வரதராஜ் நகரில் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் கலசாபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பத்ரகாளியம்மன், விநாயகருக்கு தீபாராதனை பூஜை நடந்தது. ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை குரூப் முதன்மை தலைவர் ராஜ் ஸ்ரீபதி, டிரஸ்டி ரஜினிவரதராஜன், இயக்குனர் வரதராஜன், சர்க்கரை ஆலையின் குழுமத்தலைவர் சத்தியமூர்த்தி, ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை ஆலோசகர் கிருஷ்ணசாமி, தாளாளர் மோகன்குமார், பொதுமேலாளர் ஞானசேகரன், பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், தொடர்பு அலுவலர் சுப்புராம் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர்பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us