வைகை அணையில் இன்று பாசன நீர் திறப்பு
வைகை அணையில் இன்று பாசன நீர் திறப்பு
வைகை அணையில் இன்று பாசன நீர் திறப்பு
ADDED : செப் 18, 2025 02:44 AM
ஆண்டிபட்டி:மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் ஒருபோக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக. 14 ல் 69.88 அடிவரை உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி). மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து ஜூன் 15 முதல் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போதும் வினாடிக்கு 600 கன அடி வீதம் தொடர்கிறது. வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக 68 அடியை கடந்த நிலையில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று முதல் மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 68.80 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 733 கன அடி. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 669 கன அடி நீர் வெளியேறுகிறது.கால்வாய் வழியாக வினாடிக்கு 1130 கன அடி நீர் கூடுதலாக திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.