Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்

ADDED : ஜூன் 15, 2025 06:50 AM


Google News
கம்பம்,: சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், ஆற்றங்கரையில் அமர்ந்து கொடுக்க வசதியாக, மண்டபம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இருப்பது சுருளி அருவி. இது தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற இடமாகும்.

குறிப்பாக தை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த நாட்களில் இடநெருக்கடி ஏற்படும்.ஆற்றங்கரையில் உட்கார கூட இடம் கிடைக்காது. திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமமாகும்.

ஆற்றுப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் கட்ட கம்பம் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதுக்களும், மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us