ADDED : மார் 23, 2025 04:36 AM
தேனி, : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 29, காலை 11:00 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.