Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ காட்டு மாடு தாக்கியதில் வனக்காவலர் இறப்பு

காட்டு மாடு தாக்கியதில் வனக்காவலர் இறப்பு

காட்டு மாடு தாக்கியதில் வனக்காவலர் இறப்பு

காட்டு மாடு தாக்கியதில் வனக்காவலர் இறப்பு

ADDED : மார் 24, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் காயமடைந்த வனக்காவலர் சின்னகருப்பன் இறந்தார்.

வருஷநாடு அருகே உப்புத்துறையைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பன் 48. விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் வனக்காவலராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். சின்ன கருப்பன் உட்பட வனத்துறை அலுவலர்கள், கடந்த 5 நாட்களுக்கு முன் கோட்டை மலைப் பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுமாடு விரட்டியது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எதிர்பாராதவிதமாக சின்ன கருப்பனை காட்டுமாடு கீழே தள்ளி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.

கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us