Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை

மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை

மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை

மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை

ADDED : ஜூன் 08, 2025 05:03 AM


Google News
கம்பம் : மாவட்டத்தில் தற்போதைய மாங்காய் சீசனில் விளைச்சல் குறைந்து உரிய விலை இல்லாதது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கல்லாமை, செந்தூரம், காசாலட்டு, கிரேப்ஸ், பங்கனப்பள்ளி, உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடியாகிறது. பெரியகுளம், போடி , கம்பம் பகுதிகளில் பரவலாக மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாங்காய் மே மாதம் அறுவடை துவங்கி ஜூலை இறுதி வரை நடைபெறும். தேனி மாவட்டத்திலிருந்து அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களுக்கு ஆந்திராவில் இருந்து மாங்காய் வரத்து உள்ளது. ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. சீசன் துவக்கத்தில் கிலோ ரூ.45 வரை இருந்த விலை படிப்படியாக குறைந்து கிலோ ரூ.25 விற்கிறது.

கிடைக்க வேண்டிய நேரத்தில் மழை பெய்யாமலும், தேவையில்லாத சமயத்தில் மழை பெய்தததால் விளைச்சலையும் பாதித்து விட்டது. குறிப்பாக மா மரங்களில் பூ பூக்க துவங்கும் சமயத்தில் மழை பெய்து, பூக்களை உதிர செய்தது. எனவே விளைச்சலும் இல்லை. இந்த சூழலில் விலை இல்லை என மாங்காய் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இது குறித்து முன்னோடி மா சாகுபடியாளர் புதுப்பட்டி ராஜேந்திரன் கூறுகையில் ,'காசா ரகம் சாகுபடி செய்துள்ளேன். கடந்தாண்டும்,இந்தாண்டும் தொடர்ந்து விளைச்சலும், விலையும் குறைந்து கிடைக்கிறது. கொள்முதலில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் மார்க்கெட்டில் விற்பனை இல்லை என்க்கிறனர். பங்கனப்பள்ளி ரகம் உள்ளிட்ட ஒரு சில ரகங்களுக்கு விலை சற்று கூடுதலாக கிடைக்கலாம். தற்போது பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us