/உள்ளூர் செய்திகள்/தேனி/ கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2025 02:34 AM
கம்பம்: கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் நடத்தி நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நேர்காணல்நடந்தது.
கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோர்ட்டில் இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. பிற மாவட்டங்களில் நியமனங்கள் நடக்கிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் இதுவரை நியமனம் நடக்கவில்லை.
கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன், 4 நாட்கள் நேர்காணல் நடத்த முடிவு செய்து, 2 நாட்கள் நடந்தது. இன்னமும் 2 நாட்கள் நடக்க உள்ளது. விரைவில் நேர்காணலை முடித்து, பணியிடங்கள் நிரப்பப்படும்., என்றனர்.