ADDED : மே 17, 2025 03:34 AM
மூணாறு: மூணாறு அருகே மாங்குளம், வெள்ளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மாத்யூஜோசப் 62. இவர் வீட்டில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை நடத்தி வந்தார். அவரை,மூணாறு போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அடிமாலியில் அரசு மதுபான கடையில் நேற்று மதுபானங்களை வாங்கியவர் விற்பனைக்கு கடத்திச் சென்றார். அவரை, மூணாறு எஸ்.ஐ. அஜேஸ் கே. ஜான் தலைமையில் போலீசார் கைது செய்து 13 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.