ADDED : அக் 08, 2025 07:31 AM
தேனி : தமிழகத்தில் நேற்று முன்தினம் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் 13 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் செயலாளர் சுப்பையன் உத்தரவிட்டிருந்தார். அதில் தேனி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணிபுரியும் மாரிச்செல்வி, பெரியகுளம் ஸ்ரீராஜஸ்ரீ சுகர், கெமிக்கல்ஸ் நிறுவன வடிப்பக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தேனி மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


