Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உதவித்தொகைக்காக காத்திருப்பு! 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஓராண்டாக தவிப்பு

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உதவித்தொகைக்காக காத்திருப்பு! 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஓராண்டாக தவிப்பு

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உதவித்தொகைக்காக காத்திருப்பு! 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஓராண்டாக தவிப்பு

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உதவித்தொகைக்காக காத்திருப்பு! 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஓராண்டாக தவிப்பு

ADDED : ஜூலை 24, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உதவித்தொகைக்காக காத்திருப்பதால் பராமரிப்பு செலவு, வாழ்வாதாரத்திற்காக பிறரை எதிர்பாத்து வாழும் நிலை தொடர்கிறது.தமிழக அரசால் முதியோர்களுக்கு மாதம் ரூ.1200, பார்வை குறைபாடு, காது கேளாத, வாய் பேசு இயலாத, கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ரூ.2ஆயிரம் மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற புதிதாக தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து தாசில்தார்கள் நேரில் ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு ஆணை வழங்கிய பின் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர்.

அதே போல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கின்றனர்.

டாக்டர்கள் வழங்கும் பரிந்துரை ஆணையை தொடர்ந்து இவர்களுக்கு மாற்றுத்திறன் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வகையான உதவித்தொகை பெற முதியோர், மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகங்கள் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு மட்டும் பரிந்துரை ஆணை வழங்கப்படுகிறது. 2023 ஆகஸ்ட்டில் இருந்து 2024 ஜூன் வரை 5 தாலுகா அலுவலகங்களிலும் 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உதவித்தொகை, பராமரிப்புத்தொகை பெற தகுதியானவர்கள் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு வழங்காததால் கடந்த ஓராண்டாக உதவித்தொகை, பராமரிப்புத்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதனால் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், சிலர் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்கின்றனர்.

உடல்நிலை முடியாதவர்கள் பலரின் உதவியால் வாழும் நிலை உள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாற்றித்திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர், உறவினர்கள் பெறும் சிரமத்துடன் அவர்களை பராமரிக்கின்றனர். அரசு நிதி ஒதுக்கி செய்து உரியவர்களுக்கு உதவித்தொகை, பராமரிப்பு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us