Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் தொடரும் நீர்வரத்து; மகிழ்ச்சியில் பக்தர்கள்

மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் தொடரும் நீர்வரத்து; மகிழ்ச்சியில் பக்தர்கள்

மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் தொடரும் நீர்வரத்து; மகிழ்ச்சியில் பக்தர்கள்

மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் தொடரும் நீர்வரத்து; மகிழ்ச்சியில் பக்தர்கள்

ADDED : ஜன 31, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி : மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் மழை ஓய்ந்த பின்பும் அதிக நீர் வரத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. மலைப் பகுதியில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. சுனையில் நீராடி வேலைப்பரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விரதம் இருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திச் செல்வர். அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை, அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு கோடையில் சுனையில் நீர் வரத்து குறைந்து நீர் கசிவு மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன் மலைப் பகுதியில் பெய்த மழையால் வேலப்பர் கோயில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில நாட்கள் சுனையில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. தற்போது மழைக்கான சூழல் மாறியதுடன் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலப்பர் கோயில் சுனையில் அதிக நீர்வரத்து தொடர்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுனை நீரில் குளித்து சுவாமி வேலப்பரை தரிசித்துச் செல்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us