ADDED : ஜூன் 27, 2025 05:19 AM
தேனி: போடி மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பபள்ளியில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்வதாகவும், தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கோரினால் வழங்காமல் இழுத்தடிப்பதாக அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்போடி தொடக்கல்வி டி.இ.ஓ., நாகலட்சுமி, பி.இ.ஓ., மகாலட்சுமி ஆய்வு செய்தனர்.
அந்த பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் அரசுக்கு அனுப்பிய அங்கீகார கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும், ஆய்வு அறிக்கை விபரத்தை கலெக்டர், உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.