ADDED : ஜூன் 06, 2025 04:10 AM
பெரியகுளம்: தேனி கம்போஸ்ட் யார்டு தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரபாகர் 50.
அன்னஞ்சி கிழக்கு தெருவைச் சேர்ந்த பிச்சை மகள் வைத்தீஸ்வரியின் விவகாரத்து சம்பந்தமான வழக்கு நடத்தி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிச்சை, இவரது உறவினர் செல்வக்குமார் ஆகியோர் 'எங்கள் குடும்ப பிரச்னையில், எங்களுக்கு தெரியாமல் வழக்கை எப்படி நடத்தலாம்', என கேட்டு வழக்கறிஞர் பிரபாகரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
தென்கரை போலீசார் பிச்சை, செல்வக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.-