Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உதவுவதாக கூறி, வீட்டை எழுதி வாங்கி கொலை மிரட்டல்; வழக்கறிஞர் உட்பட மூவர் மீது வழக்கு

உதவுவதாக கூறி, வீட்டை எழுதி வாங்கி கொலை மிரட்டல்; வழக்கறிஞர் உட்பட மூவர் மீது வழக்கு

உதவுவதாக கூறி, வீட்டை எழுதி வாங்கி கொலை மிரட்டல்; வழக்கறிஞர் உட்பட மூவர் மீது வழக்கு

உதவுவதாக கூறி, வீட்டை எழுதி வாங்கி கொலை மிரட்டல்; வழக்கறிஞர் உட்பட மூவர் மீது வழக்கு

ADDED : மே 19, 2025 05:46 AM


Google News
தேனி : ''தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய வங்கி கடனை செலுத்துவதாக கூறி, வீட்டினை எழுதி வாங்கி விட்டோம்.'' என, கொலை மிரட்டல் விடுவதாக, கூலி தொழிலாளி புகாரில் மூவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி வடபுதுப்பட்டி பட்டாளம்மன் கோயில் தெரு கூலித்தொழிலாளி கிட்டு சாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினர்.

கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடனை அடைக்க அருகில் வசிக்கும் சந்தியாவின் உதவியுடன் அய்யனார்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் காளிராஜை தொடர்பு கொண்டனர்.

அவர் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1.50 லட்சத்தை செலுத்தினார். அதற்காக புரோ நோட், வெற்று பத்திரத்தில் தனலட்சுமியிடம் கையொப்பம் பெற்றனர். இந்நிலையில் வீட்டை ரூ.20 லட்சத்திற்கு வாங்கி விட்டதாகவும், வீட்டினை காலி செய்யக் கூறி சந்தியா, அவரது கணவர் பாண்டி, வழக்கறிஞர் காளிராஜ் ஆகிய மூவரும் இணைந்து தனலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலுக்கு ஆளானவர் பெட்ரோலை குடித்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தனலட்சுமி புகாரில் வழக்கறிஞர் காளிராஜ், சந்தியா, பாண்டி ஆகிய மூவர் மீது அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us