ADDED : அக் 04, 2025 04:22 AM

பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம், வடுகபட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து,
வடுகபட்டி சங்கர் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தினார். ரோட்டரி சங்க பொருளாளர் டாக்டர் செல்வராஜ் 87 வது முறையாக ரத்ததானம் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். ரத்த வங்கி அலுவலர் பாரதி, ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, தன்னார்வலர்கள் பாஸ்கர், செல்வக்குமார பாண்டியன், பாண்டியராஜன் உட்பட 25 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் 30 யூனிட் ரத்தம் வழங்கினர்.


