ADDED : மார் 24, 2025 05:35 AM
போடி: உலக சர்வதேச வனநாளை முன்னிட்டு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய 4 ம் ஆண்டு மாணவர்கள் சார்பில் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் போடியில் நடந்தது.
மாணவர்கள், பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வனம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் எந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கல்லுாரிமாணவர்கள் ஜெரால்டு எடிசன், ஜேசுதாஸ், காளிராஜ், கார்த்திக், கவிபாரதி, மணிவாசகம், மனோஜ், மெய்யநாதன், மோனிஸ், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.