Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணையில் பாலிதீன் கழிவுகள் அகற்றி விழிப்புணர்வு

வைகை அணையில் பாலிதீன் கழிவுகள் அகற்றி விழிப்புணர்வு

வைகை அணையில் பாலிதீன் கழிவுகள் அகற்றி விழிப்புணர்வு

வைகை அணையில் பாலிதீன் கழிவுகள் அகற்றி விழிப்புணர்வு

ADDED : மே 29, 2025 03:13 AM


Google News
ஆண்டிபட்டி: வனத்துறை சார்பில் வைகை அணையில் பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் ஒழிப்பு குறித்து தமிழக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, பாலித்தீன் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட வனத்துறை மற்றும் பசுமை பங்காளர் அறக்கட்டளை சார்பில் வைகை அணையில் பல்வேறு இடங்களில் பாலிதீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது. தேனி உதவி வனப்பாதுகாவலர் செசில் கில்பர்ட், ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் வனப் பணியாளர்கள், பசுமை பங்காளர் அறக்கட்டளை நிறுவனர் பனைமுருகன், மாவட்ட பசுமை தோழர் அமைப்பு சார்பில் பிரியங்கா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us