Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேளாண் அதிகாரிகளுக்கு ஏ.ஐ., பயிற்சி

வேளாண் அதிகாரிகளுக்கு ஏ.ஐ., பயிற்சி

வேளாண் அதிகாரிகளுக்கு ஏ.ஐ., பயிற்சி

வேளாண் அதிகாரிகளுக்கு ஏ.ஐ., பயிற்சி

ADDED : ஜூன் 27, 2025 05:21 AM


Google News
கம்பம்: வேளாண் மற்றும் தோட்டக் கலை அதிகாரிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். தற்போது தமிழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள வேளாண் பயிற்சி நிலையத்தில் 60 வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணூட்ட சத்து குறைபாடு, புதிய நோய் தாக்குதல், பூச்சிகள், பூச்சி மருத்துகளை ட்ரோன் மூலம் தெளித்தல், மழை, மற்றும் புயல் காலங்களில் முன்கூட்டியே தகவல் தருவது உள்ளிட்ட பல பணிகள் இந்த தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு வழங்கலாம் என்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியான அளவு உரம், பூச்சிமருந்து தெளித்தல், முன்கூட்டியே நோய் தாக்குதலை அறிவிப்பது, ரோபோக்களை பயன்படுத்தி அறுவடை , களை எடுப்பது , பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகள் செய்யவும் முடியும் என்பது பயிற்சியளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் இருந்து வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் இருவர், வேளாண் அலுவலர், துணை அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us