/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி
வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி
வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி
வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி

ஊக்குவிப்பது மகிழ்ச்சி
மரகதம், பழைய ஜி.ஹெச். ரோடு, தேனி : நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அதனால் விவசாய பணிகளில் சிறு வயதில் இருந்தே ஈடுபாடு அதிகம். தற்போது நகர் பகுதியில் வசித்தாலும் மாடியில் தொட்டிகளில் காய்கறிகள், மூலிகை, பூச்செடிகள் வளர்த்தேன். தற்போது மாடியில் வீடு அமைத்ததால் தொட்டிகளை வீட்டின் முன் வைத்து செடிகளை பராமரிக்கிறேன். தினமும் காலையில் செடிகளுக்கு தண்ணீர் தெளித்து, ஏதேனும் பூச்சி, நோய் தாக்குதல் உள்ளதா என கவனிப்பேன். மழை காலம் தவிர மற்ற நேரத்தில் வெள்ளை பூச்சி தாக்குதல் காணப்படும். இந்த தொட்டிகளில் வளரும் துாதுவளை, துளசி, புதினா உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மூலிகை டீ தயாரித்து வீட்டில் உள்ளவர்கள் பருகுவோம். இதனால் இருமல், காய்ச்சல், சளி தாக்குதல்களால் பாதிப்படைவது குறைவு. செடிகள் பராமரிப்பு பற்றி அருகில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களுக்கும் பராமரிப்பு பற்றிய நுணுக்கங்களை சொல்லி கொடுப்பேன். தெருவில் பலரும் தொட்டிகளில் செடி வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது., என்றார்.
இயற்கை உரம்
பிச்சால், ஓய்வு இன்ஸ்பெக்டர், தேனி : பூதிப்புரம் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று ஆட்டு எரு வாங்கி வருவேன். காயவைத்து அரைத்து கொள்வோம். பின் செடிகளுக்கு உரங்களாக பயன்படுத்துகிறோம். மேலும் வீட்டில் காய்கறிகள் கழுவும் தண்ணீர், முட்டை ஓடு உள்ளிட்டவற்றை உரமாக பயன்படுத்துகிறோம். ஊர்களுக்கு சென்று வரும் போது ஆங்காங்கே வளர்ந்துள்ள செடிகளை கொண்டு வந்து நடவு செய்து பராமரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது., என்றார்.


