Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

ADDED : செப் 16, 2025 04:57 AM


Google News
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனியில் முகமது பாரூக் 55 என்பவர் வீட்டை எஸ்.ஐ. பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் 220 ( ஒவ்வொரு பண்டலும் 225 கிராம் எடை கொண்டது ) ஆக 49 கிலோ 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர கூல் லிப் புகையிலை பண்டங்கள் 201 ( ஒவ்வொன்றும் 100 கிராம் எடை ) மொத்தம் 20 கிலோ 100 கிராம். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை 69 கிலோ 600 கிராமாகும். இதன் மதிப்பு ரூ.68 ஆயிரத்து 208 ஆகும். இது தொடர்பாக முகமது பாரூக் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us