Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 184 கிலோ புகையிலை பறிமுதல்

ADDED : மே 14, 2025 07:27 AM


Google News
கம்பம் ; கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ புகையிலை மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கம்பம் வாரச்சந்தை அருகே இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிடுத்தனர். அப்போது உத்தமபாளையத்திலிருந்து கம்பம் நோக்கி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்.

டூவீலரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மீரா மைதீன் 45, வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது 184 கிலோ புகையிலை பொருள்கள் இருந்ததடை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.37 லட்சம்.கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்து மீரா மைதீனையும் கைது செய்தனர். கம்பம் வடக்கு எஸ்.ஐ அரசு விசாரிக்கின்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us