Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் சூதாடிய 18 பேர் கைது

தேனியில் சூதாடிய 18 பேர் கைது

தேனியில் சூதாடிய 18 பேர் கைது

தேனியில் சூதாடிய 18 பேர் கைது

ADDED : மே 21, 2025 06:51 AM


Google News
தேனி: ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சூதாடிய 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி எஸ்.ஐ., மலைச்சாமி தலைமையிலான போலீசார் தேனி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கருவேல் நாயக்கன்பட்டி முத்துச்சாமி 59, அல்லிநகரம் பாண்டி 49, பெரியகுளம் டி.வாடிபட்டி முருகவேல் 44, ஆகிய மூவரும் ரூ.400 பணம் வைத்து சூதாடினர். போலீசார் கைது செய்தனர்.அதேப்பகுதியில் பல்லவராயன்பட்டி சுருளிராஜ் 45, மதுரை பொன்னரகம் பழனிச்சாமி 54, பெரியகுளம்சிரில்ராஜ்குமார் 42, தேவதானப்பட்டி செல்வக்குமார் 42, ஆகிய நால்வரும் சூதாடிய போது கைது செய்தனர்.

தேனி: எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் பழனிசெட்டிபட்டி சொக்கநாதன் 61, சோலைமலை அய்யனார் கோயில் தெரு மகாலிங்கம் 55, உத்தமபாளையம் பாண்டி 47, ஆகிய மூவரும். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் முத்துக்குமார் 49, நாகராஜன் 41, பாப்பம்மாள்புரம் வெற்றி 42,உத்தமபாளையம் இளவரசன் 41, ஆகிய நால்வரும் சூதாடியதாக கைது செய்யப்பட்டனர்.

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சூதாடிய பூதிப்புரம் நாகராஜ் 36, வீரபாண்டி முத்துக்குமார் 46, தேனி போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு செல்வராஜ் 55, சிவராம் நகர் பழனியப்பன் 71 கைது செய்து, சூதாடிய பணம் ரூ.12,200ஐ கைப்பற்றினர். ஆக மொத்தம் நேற்று முன்தினம் சூதாடிய 18 பேர் போலீசாரால் கைதாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us