
போடி, : யாக பூஜை; உலக நன்மை வேண்டி போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பட்டு நூலால் மாலை செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு பவித்ரோஸ்தவம் யாக பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.