/உள்ளூர் செய்திகள்/தேனி/ பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா
பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா
பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா
பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா

மின்னொளியில் ஜொலித்த பூங்கா
20க்கும் மேற்பட்ட பூங்காக்களில் வளர்ந்திருந்த மரம், செடிகொடிகள், பரந்து விரிந்த பசுமையான புல் தரைகள் ஆகியவற்றால் கடந்த காலங்களில் பூங்காவில் ஒரு நாள் முழுவதும் ரசித்துச் செல்லும் வகையில் இருந்தது.
பொழுது போக்கு அம்சம் இல்லை
பாலமுருகன், கல்லூத்து, மதுரை: கடந்த பல ஆண்டுக்குப் பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்தோம். பூங்காவிலும் அமர்ந்து ரசிக்கும் வகையில் இல்லை. அனைத்து இடங்களிலும் குப்பை குவிந்து செடி, கொடிகள் பராமரிப்பு இன்றிஉள்ளது.
களையிழந்த பூங்கா
முருகேசன், வெள்ளோடு திண்டுக்கல்: வைகை அணை பூங்காவில் ஒருநாள் முழுவதும் நேரத்தை செலவிடலாம் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் வந்தோம். பராமரிப்பில்லாத பூங்காக்கள் ஏமாற்றம் அளிக்கிறது. பூங்காவில் எந்த இடத்திலும் குடிநீர் வசதி இல்லை. விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது.
ரூ.2 கோடி மதிப்பீடு தயார்
வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பூங்கா பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு போதுமான அளவு இல்லை. பூங்காவை மேம்படுத்த ரூ.2 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்கள் நியமனத்திற்கு அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.