ADDED : ஜூலை 26, 2024 12:14 AM
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில் தனியார் கே.ஆர்., மருத்துவமனை உள்ளது. இதே பகுதி வி.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்த நூர் முகமது 24.
இவரது நண்பர் சந்தானம் 27. இருவரும் இரவில் மருத்துவமனையில் நுழைந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடியுள்ளனர். வழக்கறிஞர் ஜெயராமன் புகாரில் வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், இருவரையும் கைது செய்தார்.