ADDED : ஜூலை 26, 2024 12:16 AM
தேனி : சின்னமனுார் பூசைபிள்ளை தெரு விஜயா 55. இவரது மகன் சிவகுருநாதன் 23. விஜயா கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை, ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிவகுருநாதனை திருமணம் முடிக்க தாய் விஜயா வற்புறுத்தினார். மகன் மறுத்தால் விஷம் குடித்து மயங்கினார். பின் குணமாகி வீட்டிற்கு வந்தார்.
ஜூலை 24ல் கழிப்பறைக்கு சென்று, வழுக்கி விழுந்தவரை சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலன் இன்றி உயிரிழந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.