போடி: போடி நடுத்தெரு கவிதா 41.
இவரது கணவர் மகேந்திரன் 48. இவர் தினம் குடித்து விட்டு, சம்பாதித்த பணத்தை வீணாக செலவு செய்து வந்துள்ளார். இதனை மனைவி பல முறை தட்டி கேட்டும் குடிப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மகேந்திரன் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.