Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேங்கிய கழிவு நீரில் மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் அவலம்; சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் மக்கள் சிரமம்

தேங்கிய கழிவு நீரில் மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் அவலம்; சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் மக்கள் சிரமம்

தேங்கிய கழிவு நீரில் மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் அவலம்; சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் மக்கள் சிரமம்

தேங்கிய கழிவு நீரில் மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் அவலம்; சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் மக்கள் சிரமம்

ADDED : ஜூன் 15, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
போடி : போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு மல்லிங்காபுரத்தில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் தேங்கியகழிவு நீருடன் மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் வடக்கத்தி காளியம்மன் கோயில் தெரு, தெற்கு காலனி, மேற்கு காலனி, கிழக்கு காலனி, கருப்பசாமி கோயில் தெரு, மந்தையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் ரோடுக்கான பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை.

மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மண் பாதையாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன் குளம் போல தேங்கியுள்ளது.

தெற்கு தெருவில் ஆபத்தான வகையில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. தெருக்களில் குப்பை அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் வீசி மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்னை குறித்து மக்கள் கூறியதாவது :

ரோடு வசதி இன்றி சிரமம்


கணேசன், மல்லிங்காபுரம் : 11 வது வார்டு கருப்பசாமி கோயில், மந்தை அம்மன் கோயில் தெருவில் ரோடு அமைக்க பாதை வசதி இருந்தும் இதுவரை ரோடு அமைக்க வில்லை.

இதனால் மண் பாதை குண்டும், குழியுமாக உள்ளன.

சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளன. மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலையில் சேரும் சகதியுமாக வீட்டிற்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. மந்தையம்மன் கோயில் தெருவில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான மின்மோட்டார் பழுதாகி ஓராண்டிற்கு மேலாகியும் சீரமைக்கவில்லை. மல்லிங்காபுரத்தில் இருந்து சிலமலை செல்லும் ரோட்டில் கொட்டப்படும் குப்பை அகற்றாததால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேற்கு தெருவில் மின் கம்பம் இருந்தும் விளக்கு எரியாததால் இரவில் இருள் முழ்கிவிடுகிறது. ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவு நீர் தேங்கி சுகாதாரம் பாதிப்பு


சின்னக்கருப்பன், மல்லிங்காபுரம் : தெருக்களில் சாக்கடை தூர்வாராதால் கழிவு நீரில் புழுக்களாக காணப்படுகிறது. இதனால் கொசு தொந்தரவு, சுகாதாரகேடு ஏற்படுகிறது. கொசு மருந்து அடிப்பது இல்லை. காளியம்மன் கோயில் அருகே உள்ள மின்கம்பத்தில் விளக்கு பொருத்தாததால் தலை கீழாக தொங்கிய படி உள்ளதால், எரிந்தும் பயன் இல்லாமல் உள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டி ஓராண்டிற்கு மேலாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.

இதனால் குடிநீருக்கு பதிலாக போர்வெல் நீரை பயன் படுத்த முடியாமல் சிரமம் அடைகிறோம். தண்ணீர் தொட்டி, தெரு விளக்குகளை சீரமைப்பதோடு சாக்கடை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us