ADDED : ஜூன் 23, 2024 04:47 AM
ஆண்டிபட்டி: கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.
இவர் கடமலைக்குண்டு கொம்புக்காரன்புலியூர் அருகே பெட்ரோல் பல்க் நடத்தி வருகிறார். இங்கு கடமலைக்குண்டை சேர்ந்த பாண்டி ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன் வசூலான பணம் ரூ.1.50 லட்சத்தை வங்கியில் செலுத்த சிவபெருமாள், பாண்டியை அனுப்பி உள்ளார். பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்து விட்டார். இதுகுறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.