/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம்
பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம்
ADDED : ஜூன் 14, 2024 05:37 AM
தேனி: சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோடை கால ஒரு நாள் இயற்கை முகாம் நடந்தது.
இதற்காக பள்ளி மாணவர்கள் சுருளி அருவி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 6-8 வரை பயிலும் அரசுபள்ளி மாணவர்கள் 100 தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். பஸ்சை கலெக்டர் ஷஜீவனா கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா,உதவி வன பாதுகாவலர் சிசில் கில்பர்ட், ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலர் அருள்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தேசிய பசுமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாத்தல் வலியுறுத்தி வினாடி வினா போட்டிகள்நடத்தப்பட்டது.