Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

ADDED : மார் 14, 2025 06:21 AM


Google News
போடி: போடி அருகே குண்டேரி பனங்கோடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்டவை குண்டேரி, பனங்கோடை மலைக் கிராமம். இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காபி, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர். மண் ரோட்டில் விவசாயிகள் நடந்து சென்று வந்தனர். தற்போது பாதையின் இருபுறமும் முட்புதர்களின் ஆக்கிரமிப்பாக மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வனத்துறை யினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விளை பொருட்களை் கொண்டு வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் குண்டேறி பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி, பாதையை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us