Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணிக்கவாசகர் கோயில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்

மாணிக்கவாசகர் கோயில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்

மாணிக்கவாசகர் கோயில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்

மாணிக்கவாசகர் கோயில் ஆனி திருமஞ்சன விழா துவக்கம்

ADDED : ஜூலை 02, 2024 06:32 AM


Google News
சின்னமனூர் : சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நேற்று காலை முகூர்த்த கால் ஊன்றி சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது.

சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 12 நாட்களுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 12 நாட்கள் திருமஞ்சன திருவிழா நடைபெறும்.

இந்தாண்டு நேற்று காலை 7:45 மணிக்கு முகூர்த்த கால் ஊன்றி, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

திரளான சிவனடியார்கள் பங்கு பெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்கின்றனர்.

ஜூலை 10ல் மாணிக்கவாசகர் குரு பூஜை, அன்ன தானம், அன்று மாணிக்கவாசகர் சுவாமிகள் வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து ஜூலை 12ல் ஆனி உத்திரத்தன்று, நடராஜர் சுவாமிகளுக்கு ஆனித் திருமஞ்சனம், மாலை சுவாமி வீதி உலா நடைபெறும்.

நேற்று காலை நடைபெற்ற முகூர்த்த கால் ஊன்றுதல் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் நதியா, அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை, வேளாளர் மத்திய சங்க தலைவர் ஞானசுந்தரம், ஒய்வு பெற்ற தமிழாசிரியர்கள் வேங்கடாச்சலம், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us