/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

உவர்ப்பு நீரை பருகும் நிலை
முருகன், சித்தையகவுண்டன்பட்டி: சித்தையகவுண்டன்பட்டிக்கு கூட்டுக்குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் நீரை பயன்படுத்துகிறோம். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கி பராமரிக்க முடியாமல் தொலைதூரத்தில் உள்ள தோட்டத்தில் வைத்து பராமரிக்க வேண்டி உள்ளது.
சேதமடைந்த மேல்நிலை தொட்டி
எஸ்.மணிவேல், சித்தையகவுண்டன்பட்டி: நாடக மேடை அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. குடிநீர் தொட்டியின் மேல் மூடி உடைந்துள்ளது. இதனால் தூசுகள், பறவைகளின் எச்சம் தண்ணீருடன் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது.
தண்ணீர் இன்றி கழிப்பறை மூடல்
கருப்பன், ஏத்தக்கோயில்: ஊராட்சியில் பகுதிகளில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் உள்ளது. அதுவும் மிக குறைந்தளவே உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடை தவிர்க்க குடம் நீரை 5 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. டேங்கர் லாரிகளில் தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. வசதி உள்ளவர்கள் டேங்கர் நீரை ரூ.1000 கொடுத்து வாங்கி இருப்பில் வைத்து பயன்படுத்துகின்றனர். விலை கொடுத்து நீரை வாங்க முடியாதவர்கள் தொலைவில் உள்ள தோட்டப்பகுதியில் இருந்து சைக்கிளில் கொண்டு வருகின்றனர்.
கூட்டு குடிநீர் பற்றாக்குறை
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த ஊராட்சிக்கு பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக ஆற்றில் நீர் வரத்து இல்லை. இதனால் மிக குறைவான அளவில் குடிநீர் வழங்குகின்றனர். குறைந்தளவு நீரை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்க முடியவில்லை.