/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தல் பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தல்
பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2024 05:33 AM
தேவதானப்பட்டி : பஸ் வசதி குறைவால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியகுளம் தாலுகா கிராமப்பகுதிகளான தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வடுகபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் வசதிக்காக பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டிக்கு வடுகபட்டி வழியாக காலை 8:00 மணிக்கு ஒரே ஒரு அரசு பஸ் செல்கிறது. இதே நேரத்தில் தேவதானப்பட்டி இருந்து ஒரு அரசு பஸ் வருகிறது. இதில் அதிகளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பயணிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் வசதி இல்லை. இதனால் காலையில் வரும் ஒரே பஸ்சில் அனைவரும் ஏறுகின்றனர். பல கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். மூன்று பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.