ADDED : ஜூன் 21, 2024 04:55 AM
கம்பம்: வண்டன் மேடு அருகே சாஸ்தா நடை ஆரம்ப பள்ளியில் வாசிப்பு தினம் மற்றும் நூலக திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார். வாசிப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர் முருகன் விளக்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சைலா, முத்துராஜ், சுரேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர். வாசிப்பதற்கென புத்தகங்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.