Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலை உணவுத்திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

காலை உணவுத்திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

காலை உணவுத்திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

காலை உணவுத்திட்டம் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

ADDED : ஜூலை 24, 2024 05:58 AM


Google News
தேனி : நகர்புறத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்த ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்க காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் கடந்தாண்டு முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிலும் செயல்பாட்டிற்கு வந்தது. கடந்த வாரம் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மாவட்டத்தில் தற்போது 426 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 20,400 மாணவர்கள், 87 ஊரக உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6847 மாணவர்கள் பயனடைகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நகர்பகுதிகளில் இயங்கும் உதவி பெறும் பள்ளிகள், அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

விரைவில் இப்பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us